
இயக்குனர் எழிலன் இயக்கத்தில் தீபா, எழிலன், திடியன் உள்ளிட்ட புதுமுகங்கள் சிலர் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “கட்டம் சொல்லுது”.
புதுமுக நடிகர்களை வைத்து இயக்குனர் எழிலன் இயக்கிய இப்படத்தில் காமெடி காட்சிகள் மிகவும் யதார்த்தமாகவும் மக்களை எளிதில் கவரக்கூடிய வகையிலான வசனங்களும் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எந்தவொரு முகம் சுழிக்கும்படியான லாட்சிகளோ அல்லது ஆபாச வார்த்தைகளோ இல்லாமல் முழுக்க முழுக்க குடும்பத்தோடு ரசிக்கும்படியான காட்சிகளைக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
திரையிட்ட பல இடங்களில் மக்கள் வெகுவாக படத்தை ரசித்து காண்பதை காண முடிந்தது.
Facebook Comments





