நடிகர் கார்த்தி-ரஞ்சனி தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதுகுறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது
எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் எனது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தைப் போதாது. எங்களது குழந்தைக்கு உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களும் தேவை. கடவுளுக்கு நன்றி.
இவ்வாறு நடிகர் கார்த்தி தெரிவித்திருந்தார். கார்த்தி-ரஞ்சனி தம்பதிக்கு ஏற்கனவே உமையா என்கிற பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments