
சவுதியில் நடப்பாண்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் பல்வேறு குற்றச் சம்பவங்களுக்காக 43 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
வளைகுடா நாடுகளில் போதைப் பொருள், பலாத்காரம், கொலை மற்றும் கொள்ளை போன்ற கொடிய குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் கடந்த ஒரு ஆண்டில் 172 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 3 மாதங்களில் போதைப் பொருள் கடத்தியதாக 21 பேரும், மதத்தை இழிவுபடுத்துதல், தீவிரவாதம், பாலியல் குற்றச்சாட்டு காரணமாக 22 பேருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Facebook Comments





