கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்ப்பித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகளவில் இருந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரஷீத் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி கையெடுத்து கும்பிட்டு அனைவரும் தங்களது குடும்பத்திற்காக வீட்டிலேயே இருங்கள் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
இது அங்குள்ளோரை மனம் உருக வைத்தது. அதிலும், வாகன ஓட்டி ஒருவர் ரஷீத் அவர்களின் கால்களில் விழுந்து நன்றியும் தெரிவித்த சம்பவமும் அங்கு அரங்கேறியது.
Facebook Comments