
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
தமிழக அரசு நேற்று முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Facebook Comments





