
சென்னையில் அரசின் வழிகாட்டுதல்களை யாரும் பின்பற்றவில்லை என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் பழனிச்சாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ’சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றினால் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும்
வீட்டை விட்டு வெளியே செல்லும் மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்
தமிழகத்தில் 56 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
சென்னையில் தினமும் 4000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.’ என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
Facebook Comments





