1980 – 90 களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் மோகன்.. இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் பலவற்றிற்கு உயிரோட்டம் கொடுத்தவர் இவரே என்று கூட கூறலாம்.
தனது எதார்த்தமான நடிப்பில் பல இளைஞர்களை கட்டிப் போட்டவர் நடிகர் மோகன்.. பல வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த மோகன் மீண்டும் களம் இறங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், மோகனை சந்தித்த ‘தாதா 87’ படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ, அவரிடம் கதை ஒன்றை கூறியதாகவும் அதில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments