Spotlightசினிமா

நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுகிறார்..??

 

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் நடிகர் சங்கத்திற்கான சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிறப்பு அதிகாரிக்கான போட்டியில் ரவீந்திரநாத் ஐ ஏ எஸ்,
பால சுப்ரமணியன் டி ஆர் ஓ,
அங்கையற்கன்னி ஆகிய மூவர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒருவரைத் தான் சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் வெளிவரும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது சிறப்பு அதிகாரி ஒருவரது நியமனம் எந்த அளவிற்க்கு சாத்தியம் என்பது புரியவில்லை…

Facebook Comments

Related Articles

Back to top button