
கோடை தாக்கம் அனைத்து மக்களையும் வாட்டி வதைக்கிறது. நிகழாண்டிற்கான தென் மேற்கு பருவ மழை வரும் ஜூன் மாதம் 6ம் தேதி கேரளாவில் தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குவதற்கு முன்னர் அதற்கான சாதக சூழல் அந்தமான் கடற்பகுதியில் இருக்கும் எனவும், அதன் அடிப்படையில் இந்த ஆண்டு மே 19 மற்றும் 20ஆம் தேதிகளில் தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் சாதக சூழல் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Facebook Comments





