சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கப்படவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தினைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் தமிழ் சினிமாவில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘பிதாமகன்’. இது மிகப்பெரும் வெற்றியை அடைந்தது.
மீண்டும் பாலாவோடு சூர்யா கைகோர்ப்பதால் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கும் படமாக இது அமையும் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.
இப்படத்தினை சூர்யா தனது சொந்த நிறுவனமான 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
வித்தியாசமான கதைக்களத்தோடு இப்படம் உருவாகவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.