Spotlightதமிழ்நாடு

மீண்டும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வார்கள் – தமிழிசை!

 

பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என தமிழக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். நரேந்திரன் விவாதங்களில் கலந்து கொள்வோருக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

ஊடக விவாதங்களில் பங்கேற்போரின் பட்டியல் அதன்படி, வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், கே.டி. ராகவன், ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர். சேகர் உட்பட 27 பேர் கே.எஸ். நரேந்திரனால் ஒருங்கிணைக்கப்பட்டு விவாதங்களில் கலந்து கொள்வார்கள்.

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் கருத்துகள் மட்டுமே கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்படும்.’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button