
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரிப்பு
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது சுமார் 50 பேர். இதில், டெல்லி மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் 48 பேர்
அதுமட்டுமல்லாமல், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 6 ஆக உயர்வு
மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண் கொரோனாவிற்கு பலியானதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறினார்.
Facebook Comments