Uncategorized

குழந்தைகளுக்காக மதுரையில் பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட ‘வீரன்’ !!

ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘வீரன்’ திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மண் சார்ந்த சூப்பர் ஹீரோ கதை என்பதாலும் குழந்தைகளை கவரும் வகையிலும் இருப்பதாலும் குழந்தைகள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது இந்த படம்.

இந்த நிலையில், படத்தினை குழந்தைகள் மத்தியில் கொண்டு செல்ல படக்குழுவினர் தினசரி ஒரு திரையரங்கிற்குச் சென்று தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டும், குழந்தைகள் மத்தியில் பேசிக் கொண்டும் வருகின்றனர்.

அந்த வரிசையில் இன்று மதுரை திரையரங்கு ஒன்றில் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வீரன் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

படத்தினை முழுவதும் மகிழ்ச்சியாக கண்டு களித்த குழந்தைகளுடன் இயக்குனர் சரவன் செல்ஃபி ஒன்றை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button