தமிழகத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
கோயம்பேடு மூலமாக சுமார் 1600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அரியலூரில் 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இதுவரை 48 பேர் குணமடைந்துள்ளனர்.
Facebook Comments