Spotlightசினிமா

விஜய் ஆண்டனி கலந்து கொண்ட குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா!

மிழ்நாடு அரசு தொழிலாளர் துறை சார்பாக இன்று ஜூன் 12 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோபர் கபில்  மற்றும்  இசையமைப்பாளரும், நடிகருமான விஜய்அண்டனி, முன்னாள் பெப்சி தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பெப்ஸி சிவா ஆகியோர் கலந்துகொண்டு ” மெட்ரோ தொடர்வண்டி விழிப்புணர்வு பயணத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் டி.எம்.எஸ்சிலிருந்து ,ஏர்போர்ட் வரை மெட்ரோ ரயிலில் பயணித்தனர்.

விழாவில் விஜய் ஆண்டனி பேசியது..

எந்த குழந்தையும் சிறு வயதில் வேலைக்கு செல்ல கூடாது. நல்லா படிக்கணும் சந்தோஷமா வாழனும். குழந்தைகள் உருவாக்குவதுதான் வருங்கால இந்தியா அதனால் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும். குழந்தை தொழிலாளர் இல்லாத நிலை வரவேண்டும் என்றார்

Facebook Comments

Related Articles

Back to top button