
விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயஸ்ரீ என்ற மாணவியை எரித்து கொலை செய்த முருகன் மற்றும் கலிய பெருமாள் இருவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிமுகவினர் கலியபெருமாள்- முருகனுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உரிய நீதி கிடைக்க தி.மு.க துணை நிற்கும்.’ என்று கூறியுள்ளார்.

Facebook Comments





