விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ (15). பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
வீட்டில் ஆள் இல்லாத போது, வீட்டிற்குள் நுழைந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள், இருவரும் சிறுமி ஜெயஸ்ரீயை கட்டிப் போட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர்.
இதனால், அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயஸ்ரீ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முருகன் மற்றும் கலிய பெருமாள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீஸார்.
இறுதியாக சிறுமி கொடுத்த வாக்குமூலம் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இச்சம்பவம், மனதை கனக்க வைத்துள்ளது.
Facebook Comments