சற்று நேரத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும் போது, ‘ 76 இடங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இருப்பதால், டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு வாய்ப்பில்லை
ஊரடங்கு தளர்வு பற்றி ஏப்ரல் 27 மீண்டும் ஆலோசனை நடத்தப்படும்.
டெல்லியில் புதிதாக கொரோனா உறுதியான 186 பேரும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளனர்
அறிகுறியே இல்லாமல் 186 பேருக்கு கொரோனா உறுதியான விவகாரம் கவலையளிக்கிறது.
மாநாட்டின் காரணமாக டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது, நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதியானவர்களில் 12% பேர் டெல்லியில் உள்ளனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Facebook Comments