2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க வெளியான திரைப்படம் தான் ‘புதுப்பேட்டை’.
இப்படம், அந்த நேரத்தில் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், நாளடைவில் இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது கொண்டாடப்பட்டது.
இதன் இரண்டாம் பகுதி எப்போது வரும் என சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்களும் செல்வராகவன் ரசிகர்களும் கேட்காத நாள் இல்லை..
அதன் தாக்கம் அனைவராலும் பேசப்பட்டு, செல்வராகவனை இரண்டாம் பாகத்திற்கு தயார்படுத்தியது.
‘புதுப்பேட்டை 2’ படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை எழுதும் பணியில் மும்முரமாக களம் இறங்கினார் செல்வராகவன்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட செல்வராகவன், தனுஷ் படப்பிடிப்பு நாட்கள் கொடுத்தால் ‘புதுப்பேட்டை 2’ துவங்கி விடலாம் என்று கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியாகியுள்ளனர். தனுஷிடம் இருந்து கிரீன் சிக்னல் எப்போது வருமோ.??
Facebook Comments