Spotlightஇந்தியாதமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள் – 10/09/18

 

திருச்சியில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகின்றன – தனியார் பேருந்துகள் இயங்கவில்லை.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 83.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து 73.68க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடகா செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்.

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியிலிருந்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் தாமதம் ஏற்படாமல் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: டிடிவி தினகரன்.

கரூர் 50 % , சிங்கம்புணரி 90% , ராமநாதபுரம் 80% , ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் பேருந்துகள் இயங்கவில்லை.

திமுகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது – தம்பிதுரை குற்றச்சாட்டுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்.

கர்நாடகாவில் இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

காவல் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜன் கைது.

Facebook Comments

Related Articles

Back to top button