திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ஹரிஹரன் . இவர் இன்று மாலை அரியமங்கலம் உக்கடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் ஹரிஹரனின் தலை மற்றும் கையில் பலமாக வெட்டினான்.
ஹரிஹரனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் தாக்கிய நபர் ஓடி விட்டான். பலத்த காயம் அடைந்த ஹரிஹரனை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Facebook Comments