Spotlightசினிமாதமிழ்நாடு

”குஷ்பு தான் மிகவும் மோசமான பெண்..” உச்சக்கட்ட போர் தொடுக்கும் காயத்ரி ரகுராம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை ஜெய் ஸ்ரீராம் என்று கூற சொல்லி அவரை அடித்தே கொன்ற விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கருத்து தெரிவித்துள்ள நடிகையும் காங்கிரஸ் தலைவியுமான குஷ்பு, ‘ இது தான் புதிய இந்தியாவா..??’ என்று கேள்வி கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட் செய்துள்ள காயத்ரி ரகுராம், இந்துக்களை மட்டும் குறிவைத்து கொலைகாரர்களாக் சித்தரிப்பது நாளுக்கு நாள் ட்ரெண்டாகி வருகிறது. மற்ற மதத்தினர் ஏதாவது கொலைகள் செய்தால் குஷ்பு ஏன் வாய் திறப்பதில்லை.

குஷ்பு காங்கிரஸில் செயல்படும் விதம் அனைவரும் தெரிந்தது தான். நான் விளக்கம் அளிக்கு வகையில் அவர் ஒன்றும் அவ்வளவாக வொர்த் இல்லை என்று கூறியுள்ளார் காயத்ரி ரகுராம்.

காங்கிரஸ் பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது சமீப காலங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button