
கொரோனா பாதிப்பால் நடப்பாண்டில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு 7 சதவீதம் வரையில் வருவாய் இழப்பு ஏற்படும் என்ற கணிப்புகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பால் நடப்பாண்டில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு 7 சதவீதம் வரையில் வருவாய் இழப்பு ஏற்படும் என்ற கணிப்புகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிகழ்ந்துள்ள பாதிப்பு 6 மாதங்கள் வரை நீடிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், இந்திய மென்பொருள் நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்கள் கொரோனா பீதியால், அதிக வருவாய் இழப்பைச் சந்திக்கும் எனவும், இத்துறையில் இந்த ஆண்டில் மட்டும் 2 முதல் 7 சதவீதம் வரையில் வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மருத்துவத்துறை சார்ந்த புராஜெக்ட் இந்நிறுவனங்களுக்கு கிடைக்க பெற்றால், ஐடி நிறுவனங்கள், கடும் வீழ்ச்சியிலிருந்து தப்பித்திடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும், ஏப்ரல் – ஜூன் காலாண்டிலும், அதைத் தொடர்ந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டிலும், ஐடி துறையின் வளர்ச்சி மந்தமாக இருக்கும், என்றே பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.