தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.
அதோடு, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Facebook Comments