Spotlightசினிமா

படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய சிம்பு… மாற்றப்பட்ட இயக்குனர்!

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’. இப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கியிருந்தது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்.

சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்க 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இப்படமும் வளர்ந்து வந்தது. கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.

இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம் கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடித்து வந்தனர்.

அப்போது, டிடீரென படப்பிடிப்பு நின்று போனது. படப்பிடிப்பில் இருந்து சிம்பு வெளியேறினார்.

இதனால், இப்படம் நின்று போனது என சொல்லப்பட்டது. இந்நிலையில், இதன் படப்பிடிப்பை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இதற்கான பணிகளையும் துவங்கி விட்டனர்.

பிப்ரவரி மாதத்தில் இதன் படப்பிடிப்பை துவங்கவிருக்கின்றனர். ஆனால், இயக்குனர் தான் மாற்றப்பட்டார்.

சில்லுனு ஒரு காதல் படத்தினை இயக்கிய கிருஷ்ணா தான் இப்படத்தை இயக்கவிருக்கிறாராம்.

Facebook Comments

Related Articles

Back to top button