ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் தான் ‘கடாரம் கொண்டான்’.
பத்து நாட்களுக்கு முன் இப்படம் வெளியானது. விக்ரமின் ஸ்டைலிஷான நடிப்பில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வெற்றிகரமாக இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தை மலேசியாவில் வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்தது. அதற்கு காரணம் இதுதானாம்.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் விக்ரம் மிகவும் சாதாரணமாக மலேசிய காவல்நிலையத்திற்குள் சென்று போலீஸாரை கொன்று மீண்டும் வெளியே வருவது போன்று காட்சி இருக்கும்.
இக்காட்சி, அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிர்மறையான காட்சியாக எடுக்கப்பட்டிருப்பதால் தான் படத்தை வெளியிட தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மலேசிய காவல் நிலையத்திற்குள் அவ்வளவு எளிதாக யாரும் நுழைந்து விட முடியாது என்றும், உலக நாடுகளில் சிறந்த போலீஸ் என்றால் அது மலேசிய போலீஸ் மட்டும் தான். ஆகவே, உண்மைக்கு புறம்பான காட்சிகளாக இது எடுக்கப்பட்டிருப்பதாக மலேசிய பிரபலம் ஒருவர் கொடுத்த தகவல் தான் இது..