தொடர்ந்து நடிகைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. அவ்வப்போது சில வி ஐ பி-க்கள் மீ டு’வில் சிக்கி சிதைந்து விடுகின்றனர்.
அப்படியாக விஷால், ஸ்ரேஷா ரெட்டி நடித்த ‘திமிரு’ படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக நடித்திருந்த விநாயகன், மலையாள சினிமாவில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் விநாயகன் மீது சமூக ஆர்வலர் மிருதுளா தேவி என்ற இளம்பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
இது குறித்து கூறிய மிருதுளா, “நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விநாயகனை தொலைபேசியில் அழைத்தபோது தன்னிடம் ஆபாசமாக பேசிய அவர், தான் மட்டுமல்லாது தன்னுடைய தாயும் சேர்ந்து அவர் விரும்பும்படி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என பாலியல் ரீதியாக கோரிக்கை வைத்தார்.” என குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விநாயகன், தற்போது பாலியல் புகாரில் சிக்கியிருப்பது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.