
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வருகிறது ‘சாஹோ’. படத்தினை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து அதே மாதம் 31 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது படக்குழு.
தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறும்போது, “நாங்கள் சிறந்ததை பார்வையாளர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். சண்டைக் காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு நமக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. நாங்கள் சுதந்திர தினத்திலிருந்து தேதியை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றாலும், சாஹோவுடன் சுதந்திர தின மாதம் மற்றும் தேசபக்தி இணைந்திருக்க விரும்புகிறோம். மிகப்பெரிய திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.
பிரபாஸ் நடித்துள்ள சாஹோ மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். ஸ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்துள்ள இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளசர்மா என மிகச்சிறந்த நடிகர்களும் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களின் மனநிலையை இந்த தாமதம் ஏன் தடுத்து விட போகிறது.





