Spotlightவிளையாட்டு

இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து.. தடுமாறும் இந்தியா!!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியின் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 322 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 423 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது.

இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் அதிகபட்சமாக 147 ரன்களும், கேப்டன் ரூட் 125 ரன்களும் எடுத்தனர். 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

தொடர்ந்து ஆடி வரும் இந்திய அணி 5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 13 ரன்களை எடுத்து மோசமான நிலையுடன் ஆடி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button