சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகர் வைகைப்புயல் வடிவேலு.
அடுத்ததாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் “நாய் சேகர்” என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்கப்படவிருக்கிறது. இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கவிருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி ஜி எம், பாடல் என தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் சந்தோஷ் நாராயணன் இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது மேலும் ஆர்வத்தை அதிகரிக்க வைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் ஒரு பாடலை பாட தான் ஆசைப்படுவதாகவும் வடிவேலு கூறியுள்ளாராம்.
Facebook Comments