சென்னைக்கு கிழக்கே-வடகிழக்கே 260 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது ‘பெய்ட்டி’ புயல். தீவிர புயலான பெய்ட்டி வடக்கு-வடமேற்காக மணிக்கு 16கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர புயலான பெய்ட்டி சற்று வலுகுறைந்து, புயலாக இன்று பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை பெரிதளவில் பாதிப்பு ஏதும் இருக்காது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Facebook Comments