வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் நாளை அதிகாலை பாம்பனுக்கும் – கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
அடுத்த 3 மணி நேரத்தில் மன்னார் வளைகுடாவில் புரெவி நிலைகொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாம்பனிலிருந்து 120 கிமீ தொலைவில், கன்னியாகுமரியிலிருந்து 320 கிமீ தொலைவில் உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
சென்னை, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.