
புரெவி புயல் காரணமாக தென் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக தமிழகத்தின் பல மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், புரெவி புயல் முன்னெச்சரிக்கை பற்றி தமிழக முதல்வர் பழனிசாமியுடன் தொலைபேசி மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்துள்ளார்.
மேலும், மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் கூறினார். ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Facebook Comments





