Spotlightசினிமா

தமிழக முதல்வரை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது; விஜய்யின் தந்தை மீது ஆர் கே செல்வமணி தாக்கு!

ம்மா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு பெப்சிக்கு தலா ஒரு கோடியை முதல் தொகை காசோலையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.

இதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி பேசும் போது, ‘ அம்மா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு ஒரு கோடியை முதல் தொகையாக வழங்கிய தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இதன் அடிக்கல்நாட்டு விழா நடைபெறும் ’ என்று கூறினார்.

மேலும் அவர் பேசும் போது, ‘ சாமாணிய மக்கள் எளிதில் பார்க்கக்கூடிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமா வளர்ச்சி அடைய பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதனால் அவரை நாகரீகமற்ற முறையில் எஸ் ஏ சி விமர்சனம் செய்வதை ஒரு காலமும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்தில் தனது இயக்கத்தில் உருவாக்கியிருக்கும் ’கேப்மாரி’ படத்தின் ப்ரஸ் மீட்டில் கலந்து கொண்டு கேப்மாரின்னா CM என்று அர்த்தம் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button