Spotlightசினிமா

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் கைகளில் சிக்கிய ‘களவாணி 2’ வில்லன்!

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘களவாணி 2’ படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகராக ஓடிக்கொண்டிருப்பதோடு, படத்தில் அறிமுகமான நடிகர்களும் மக்களிடம் பிரபலமாகியுள்ளார்கள்.

அந்த வகையில், படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ராஜேந்திரன் என்கிற ராவண்னா என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். இவரை எதிர்த்து தான் ஹீரோ விமல் ஊராட்சி தேர்தலில் போட்டியிடுவார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நீடிக்க, ஊரே ராவண்னாவின் பக்கம் இருக்கையில், விமலின் களவாணி தனத்தால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார்.

கதாபாத்திரம் வில்லனாக இருந்தாலும், எந்தவித களவாணி தனமும் செய்யாமல் நேர்மையான முறையில் தேர்தலை எதிர்கொள்ளும் துரை சுதாகர், தனது தோல்வி முடிவு அறிவித்த பிறகு, அயோக்கிய பயலுவல்டயும், களவாணிப் பயலுவல்டயும் நல்லவங்க தோத்துப்போறதுதான் நம்ம நாட்டு அரசியலோட சாபக்கேடு” என்ற
வசனம் பேசியபடியே நடந்து செல்வார்.

அவரது இந்த வசனம், வைரலாகி மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுவரை அரசியலில் தோற்றவர்கள் பயன்படுத்திய, ”தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தருமமே வெல்லும்” என்ற வசனம் தற்போது மாறி, துரை சுதாகர் பேசிய அரசியல் வசனங்கள் பிரபலமாகி அனைவராலும் பாராட்டப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button