Spotlightசினிமா

ரஜினிக்காக 27 வருடத்திற்கு பிறகு நடக்கும் நிகழ்வு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க வெளியானது “பேட்ட”. இப்படத்தினைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் சையமைப்பாளர் அனிருத் என்பது சமீபத்தில் தெரியவந்தது.

காமெடி நடிகர் யோகிபாபு இப்படத்தில் இணைந்துள்ளார்.

தற்போது படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் ட்விட்டரில், தளபதி படத்திற்கு பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் பணிபுரிவது மிகவும் உற்சாகமாக உள்ளது என பதிவு செய்திருக்கிறார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய தளபதி படத்திற்கு சந்தோஷ்சிவன் தான் ஒளிப்பதிவாளர். சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் சூப்பர்ஸ்டாரை திரையில் எப்படி பிரதிபலிக்கப்போகிறார் என்ற ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button