
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது.
பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்காக களமிறங்கிய சென்னை அணி சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டது.
அதிரடியாக விளையாடிய சுரேஷ் ரெய்னா 30 ரன்களுடனும், ஷேன் வாட்சன் 44 ரன்களும் குவித்தனர். தோனி வழக்கம் போல் நிதானமாக ஆடி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்ட வைத்தார்.
மைதானத்தில் பேட்டுடன் களம் இறங்கிய தோனியை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். தோனியை ரசிகர்கள் பலரும் குரல் எழுப்பி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த வேலையில் மறுபக்கம் தோனியின் மகளான ஸிவாவும் தனது அப்பாவை ஊக்கப்படுத்தினார்.
Facebook Comments




