இளையதளபதியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தளபதியாக தமிழ் சினிமாவில் ஆலமரமாய் நிற்கும் விஜய்யின் வளர்ச்சிக்கு அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மிக முக்கிய காரணம் என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்று தான்.
ஆரம்பகட்டத்தில் இவரது அயராத உழைப்பால் விஜய் இந்த இடத்தை அடைய முடிந்தது.
தொடர்ந்து சில வருடங்களாக விஜய்க்கும் எஸ் ஏ சி’க்கும் தொடர் மோதல் இருந்து வருகிறது. தனது பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என தாய் , தந்தையர் மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார் விஜய்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பீஸ்ட் பட ப்ரோமோஷனில் தந்தை குறித்து அன்புடனும், பாசத்துடனும் பேசினார். இதனால் இருவருக்கும் இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கிவிட்டதாக கருதப்பட்டது.
இந்நிலையில் எஸ்.ஏ. சந்திரசேகர் நேற்று தனது 81ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தில் அவரது மனைவி ஷோபா கணவருக்கு கேக் ஊட்டும் புகைப்படங்கள் வெளியாகின. உடன் எஸ் ஏ சியின் உதவி இயக்குனர்கள் மட்டுமே இருந்தனர். இதனைக் கண்ட நெட்டிசன்கள், விஜய் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டாரா என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.