சில வருடங்களுக்கு முன் நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் அக்ஷய் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் குமார் சிங் ஆகிய நால்வருக்கும் இன்று அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சில வருடங்களாக நீடித்த வழக்கிற்கு இன்று முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தண்டனை நிறைவேற்றப்ட்டது குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ” பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! ‘தா தா 87’ படத்தின் டீஸர் இயக்கிய போது இவர்களை போன்றவர்களை மனதில் வைத்து நான் எடுத்த பதிவு அன்று.
இன்று இந்திய சட்டம் தூக்குதண்டனை முலம் நிறைவேற்றியது. ” என்று கூறியுள்ளார்.
பெண்களை அவர்களது உரிமை இல்லாமல் தொட்டால அவர்களை உயிரோடு விடக்கூடாது என்ற கதை கொண்டு தாதா 87 என்ற படத்தினை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.