
இந்திய எல்லையான லடாக்கில் சீன இராணுவத்தின் அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருந்து வருகிறது.
இருநாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. க்டந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கும் சம்பவமாக மாறியது.
இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் டெல்லியிலிருந்து லடாக் சென்றார்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் லடாக்கிற்கு அவசரமாக சென்றிருக்கிறார் மோடி.
முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக நடந்து எல்லை பகுதியில் இருக்கும் இந்திய இராணுவ வீரர்களுடன் கலந்து உரையாடினார்.
அடுத்ததாக, சீன ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த வீரர்களை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments





