கார்த்தியின் புதிய படத்திற்கு சுல்தான் என பெயரிடப்பட்டிருக்குதாம். இது திப்பு சுல்தான் பற்றிய கதை என்றும் சொல்லப்படுகிறது. ஆனா, இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்றது.
இதனை அறிந்த பா.ஜ.க. – இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து , கெட்ட கெட்ட வார்த்தைகளோட மலைக் கோட்டையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து படப்பிடிப்பை நிறுத்திவிட்டு பேக் அப் பண்ணிட்டு மலைக்கோட்டையிலிருந்து குழுவினர் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு இந்து அமைப்பினர் கலைந்து சென்றதால், அப்பகுதியில் நிலவிய பதட்டம் தணிந்தது.
Facebook Comments