
தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனிக்கு பொருந்தும்.
இந்திய ரசிகர்கள் பல ஆண்டுகளாக கனவு கொண்டிருந்த உலக கோப்பையை 2011 ஆம் ஆண்டு வாங்கி கொடுத்தவர் அவர் தான்.
தமிழகத்தில் தன்னகத்தே ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளார் எம் எஸ் தோனி.
2019 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை போட்டியின் தோல்விக்குப் பிறகு எம் எஸ் தோனியின் ஓய்வு பற்றி ஆங்காங்கே விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்தியஅமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான சஞ்சய் பஸ்வான் எம் எஸ் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் கொடுக்கப்படும் எனவும், விரைவில் அவர் பாஜக-வில் இணைவார் எனவும் தெரிவித்துள்ளார்….
பார்ப்போம்.. காலம் பதில் கூறட்டும்…
Facebook Comments





