Spotlightதமிழ்நாடு

தஞ்சை பெரியகோயிலில் நாளை குடமுழுக்கு விழா… கலைகட்டும் நகரம்!

ஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா நாளை (புதன்) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கை முன்னிட்டு தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. குடமுழுக்கையொட்டி நாளை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில், தமிழரின் பாரம்பரிய நடனம், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறவிருக்கின்றன.

இதனால், பல்வேறு ஊர்களில் இருந்து மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் இருந்தும் பயணிகள் தஞ்சை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

தமிழர்களின் வீரத்தையும், தமிழனின் பெருமையையும் பறைசாற்றும் விழாவாக இது கருதப்படுவதால், அனைவரும் இதை கொண்டாடி வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button