Spotlightசினிமா

பிரைம் வீடியோ இந்திய ஒரிஜினல் சிட்டாடலில் நடிக்கும் சமந்தா

சமந்தா ரூத் பிரபு, வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ இந்திய ஒரிஜினல் சிட்டாடலில் நடிக்கிறார். இரட்டையர்களான ராஜ் & டிகே உருவாக்கத்தில், தயாராகிவரும் இந்த ஒரிஜினல் தொடர் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.

ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO குளோபல் ஈவண்ட் தொடரான சிட்டாடல் யுனிவர்சின் இந்திய இன்ஸ்டால்மெண்டில் தலை சிறந்த நடிகையான சமந்தா ரூத் பிரபு, வருண் தவானுடன் இணைந்து நடிக்கவிருப்பதை ப்ரைம் வீடியோ இன்று உறுதிசெய்திருக்கிறது. ராஜ் & டிகே தான் இந்தத் தொடரின் முதன்மைத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள். இந்த உள்ளூர் அளவிலான தொடருக்கான கதையை ராஜ் & டிகே உடன் இணைந்து சீதா ஆர்.மேனன் எழுதியுள்ளார். இதன் தயாரிப்பு வேலைகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருவதையும் இதன் ஸ்ட்ரீமிங் சேவை வழங்குநர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, படப்பிடிப்புக் குழுவினர் வட இந்தியாவிற்கும், பின்னர் செர்பியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற சர்வதேச படப்பிடிப்புத் தளங்களுக்கும் செல்வார்கள் . இந்த இந்திய ஒரிஜினல் சிட்டாடலின் தொடரை பிரைம் உறுப்பினர்களால் கண்டுகளிக்க முடியும்.

“தனது ஸ்ட்ரீமிங் அறிமுகத்தை ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் இரண்டுடன் பிரைம் வீடியோவில் தொடங்கிய சமந்தா, இன்று திரைத்துறையில் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர்களில் ஒருவராகவும் விளங்கி வருகிறார். இந்தத் தொடரில் வருண் மற்றும் எங்களோடு அணிவகுத்துள்ள வியக்கத்தக்க திறமை வாய்ந்த நடிகர்களின் குழுவோடு இணைந்து ஒரு முற்றிலும் புதிய அவதாரத்தில் அவரைத் திரையில் பார்வையாளர்கள் காண்பார்கள்.” என்று ப்ரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார்.

“சிட்டாடலின் இந்திய இன்ஸ்டால்மெண்ட்டின் கேன்வாஸ் வாழ்க்கையை விட மேலான விசித்திரங்கள் நிறைந்தது , ஆனால் அதன் உருவாக்கம் மற்றும் நயம் கடந்த காலத்தில் வேரூன்றிய மாறுபட்ட ஒன்று. இந்தத் தொடர் இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் விரிவாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பயணத்தை ராஜ் & டிகே தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதாலும், அபார திறமைவாய்ந்த நடிகர்கள் இருப்பதாலும், சிட்டாடலின் இந்திய அத்தியாயங்கள் அபாரமான ஆச்சரியப்படத்தக்க ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

“தி ஃபேமிலி மேன் படத்திற்குப் பிறகு மீண்டும் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே , எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் ஒரு மிகப்பொருத்தமான தேர்வாக இருந்தார். அவரை எங்களோடு இணைத்துக்கொண்டதில் எங்களை விட வேறு யாரும் மகிழ்ச்சியடைந்திருக்க முடியாது..” என்று படைப்பாளி இரட்டையர்களான ராஜ் & டி.கே. கூறுகிறார்கள்.

“இந்தியாவின் சிட்டாடல் தயாரிப்பை தொடங்கியதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நாங்கள் செர்பியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வதற்கு முன், இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. எங்களிடம் ஒரு அற்புதமான படப்பிடிப்பு குழுவினர் மற்றும் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்கள் உள்ளனர். இது ஆக்கப்பூர்வ சிந்தனையோடு கூடிய நடைமுறைகளுக்கு மேலும் உற்சாகமளிக்கிறது”.

இந்தத் திட்டம் குறித்து, பிரைம் வீடியோ மற்றும் ராஜ் & டிகேவும் என்னை அணுகியபோது, இதை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தேன். இந்த குழுவுடன் ‘தி ஃபேமிலி மேன்’ படத்தில் பணிபுரிந்த பிறகு, இது எனக்கு மீண்டும் ஒரு ஹோம்கமிங் ஆக இருக்கிறது ” என்று சமந்தா ரூத் பிரபு கூறினார். “சிட்டாடல் யுனிவர்ஸ் இன் கதைக்களம் , குளோப் முழுவதுமான அனைத்து தயாரிப்புகளுக்கு இடையே ஊடுருவி ஒன்றோடொன்று தொடர்புகொண்டு இணைக்கப்பட்ட ஒன்று மற்றும் மிக முக்கியமாக, இதன் இந்திய இன்ஸ்டால்மெண்டின் ஸ்கிரிப்ட் எனக்கு உண்மையாகவே மிகவும் உற்சாகமூட்டியது.” ருஸ்ஸோ சகோதரர்களின் கருத்தாக்கத்தில் உருவான இந்த மிகச்சிறந்த யுனிவர்ஸ் இன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாயிருக்கிறேன்.. இந்த தயாரிப்பின் மூலம் முதல்முறையாக வருணுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் நான் எதிர்பார்க்கிறேன்.”

Facebook Comments

Related Articles

Back to top button