சில தினங்களுக்கு முன் தாதா 87 படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நடிகர் அஜித்குமார் போன்ற ஒரு சிலருக்கு விருதுகள் வழங்கும்வது சமீபத்தில் நான் கேள்வி படவில்லை. அவர்கள் பொதுவிழாக்களுக்கு வருவதில்லை என்பதால் இருக்குமோ ? விருதுகள் விற்பதை தடுக்கவேண்டும் கூட்டம் கூட்டி பணத்துக்கா நடத்துவது தொடர்கிறது..” என்று பதிவிட்டிருந்தார்.
நடிகர் அஜித், விருது வழங்கும் நிகழ்ச்சி, பொது விழாக்களில் சமீபகாலமாக சில வருடங்கள் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இதனால் தான் அவருக்கு விருதுகள் நிராகரிப்படுகிறதோ என்று இயக்குனர் விஜய் ஸ்ரீ கேள்வி எழுப்பியதன் விளைவாக, அஜித் ரசிகர்கள் பலர் தங்களது ஆதரவை விஜய் ஸ்ரீ அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
வெறும் பணத்துக்காகத்தான் இந்த விருது வழங்கும் விழா நடைபெறுகிறது என்று விஜய் ஸ்ரீ கூறிய இந்த துணிச்சலான கருத்தை ரசிகர்கள் மட்டுமல்ல, பல நட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர்.
.