
கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் இன்று திரையுலகில் நல்ல ஒரு இடத்தை பிடித்துள்ளனர். அந்த வரிசையில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா. இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இணை பிரியாத தோழிகளாக இருந்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் பட வாய்ப்புகள் சரிவர இல்லாமல் இருந்து வந்த ஐஸ்வர்யா, தற்போது ஆரியுடன் ஒரு படம் மஹத்துடன் ஒரு படம் என்று நடித்து வருகிறார். அதே போல யாஷிகாவும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டனர்.
இந்நிலையில் யாஷிகா மற்றும் ஐவார்யாவின் நட்பு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதை யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.

Facebook Comments





