திமுக சார்பில் திருச்சியில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மு க ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும்,
பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைக்கப்படும்
பட்டதாரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும்
நகர்புறத்தில் புதிதாக 35 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி
கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி உயர்த்தப்படும்
தமிழகத்தின் பசுமை பரப்பளவை உயர்த்த நடவடிக்கை
10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம்
துறைகளை சீரமைப்பதே எனது முதல் பணி
நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், சமூக நீதி இவை உள்ளிட்ட 7 துறைகள் முக்கியமானவை
என்றும் கூறினார்.
Facebook Comments