கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி ரஜினி நடிப்பில் உருவான ‘பேட்ட’ வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பேட்ட படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
சில மாதங்களாக திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மார்ச் மாதம் இறுதி வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்ப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த அரசியல் படமாக உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் சினிமா உலகில் இப்படம் ஒரு முக்கியமான படமாகவும் அமையும் எனவும் தெரிகிறது.
Facebook Comments