தாதா 87 படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கும் அடுத்த படம் தான் பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி). இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறா சான்ரியா. சங்ககிரியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சான்ரியா, பெ.டெக் பட்டப்படிப்பு முடித்து அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவிற்குள் காலடியெடுத்து வைத்துள்ளார். இவரின் நடிப்புத் திறமையைக் கண்ட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி பப்ஜி படத்தின் நாயகியாக தேர்வு செய்துள்ளார்.
இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா, அனித்ரா, சாந்தினி, ஆராத்யா என பல நாயகிகள் இருந்தாலும், எனது கதாபாத்திரம் பலம் வாய்ந்ததாக இருக்கும். ஒரு படத்தில் எத்தனை நாயகிகள் இருந்தாலும், கதையின் முக்கியத்துவம் கருதி அதில் நடிப்பது தவறு ஏதும் இல்லை. அதுமட்டுமல்லாமல், நான் யாரிடமும் நடிப்பு கற்றுக் கொள்ளவில்லை. என்னிடம் இருக்கும் திறமையை வைத்து நான் முன்னேற ஆசைப்படுகிறேன். யாரையும் நான் ஃபாலோ செய்ய வேண்டிய அவசியமும் என்னிடம் இல்லை என கெத்தாக கூறுகிறார் நாயகி சான்ரியா.
கிளாமர், ஹோம்லி என எந்த முத்திரையும் என் மேல் விழாமல் பார்த்துக் கொள்வேன். எல்லா மாதிரியான ரோலையும் செய்வதற்கு நான் தயராகா இருக்கிறேன். ரசிகர்களை ரசிக்கும்படியாக எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நான் அதை ஏற்று நடிப்பேன்.
என்றும் கூறுகிறார் நாயகி சான்ரியா.