ஒரு பெரும் புயல் அடித்து ஓய்ந்த ஒரு தோற்றம் தான் ‘ஐபிஎல் 2019’ திருவிழா. இந்த கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி மும்பை அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து.
இது சென்னை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், உலகின் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர்க்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
கோப்பையை மும்பை அணி ஜெயித்திருந்தாலும், மக்களின் மனதை சென்னை அணியே கைப்பற்றியுள்ளது.
மொத்தமாக 27 மில்லியன் ட்விட்கள் ஐபிஎல் சார்ந்து பதிவிடப்பட்டுள்ளது. இதில் சென்னை அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
மும்பை, கொல்கத்தா, பெங்களூர் அணிகள் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. வீரர்களில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதல் இடத்தையும், பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
கோப்பை வேண்டுமானாலும் உங்களிடம் இருக்கலாம், ஆனால் மற்றவற்றில் நாங்கள் தான் என்றுமே முதலிடம் என்று சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.